உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்க ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகை!
7 view
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகை தரவுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதுடன், 2008 ஏப்ரல் மாத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் இலங்கை விஜயத்திற்கு பின்னர், ஈரான் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைசாத்திடப்படவுள்ளது. அத்துடன் மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில் நாளை (24) திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் உமா…
The post உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்க ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்க ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
