கல்முனை என்பது தமிழரின் தாயகம்! – முன்னாள் எம்.பி. கோடீஸ்வரன் சூளுரை..!!
15 view
“கல்முனை என்பது தமிழர்களின் தாயகம், தமிழர்களின் அடையாளம். அதனை யாரும் மறந்துவிட முடியாது. நீங்கள் மறக்கவும் கூடாது.” – இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், நற்பிட்டிமுனையில் உரையாற்றும்போது தெரிவித்தார். “கல்முனையில் எமது நிலத்தை இழந்தால் எமது அடையாளமே போய்விடும். யாருக்காகவும் அதனை விட்டுக்கொடுக்ககூடாது. பறிகொடுத்தால் அடையாளம் பறிபோய்விடும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார். நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கான சீருடை வழங்கும் நிகழ்வு விளையாட்டுக் கழகத் தலைவர் ஐ.கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கோடீஸ்வரன் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பிரதேச செயலகம் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமையாக இருக்கின்றது. எமது அடையாளத்தைப் பாதுகாப்பதில் இடம் முக்கியமானது. எமக்கான அடையாளம் இருக்க வேண்டுமாக இருந்தால் எமது இடம் பறிபோகக் கூடாது. இதை விட்டால் நாளை கல்முனையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும். 30, 40 வருடங்களுக்கு முன் தள்ளிப் பார்ப்போமானால்கல்முனைப் …
The post கல்முனை என்பது தமிழரின் தாயகம்! – முன்னாள் எம்.பி. கோடீஸ்வரன் சூளுரை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை என்பது தமிழரின் தாயகம்! – முன்னாள் எம்.பி. கோடீஸ்வரன் சூளுரை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
