சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த நபர்..!!
5 view
பிரபல ரஷ்ய Influencer-ன் சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்தமைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளார். எவ்வாறெனில் Maxim Lyutyi தீவிரமான விசித்திரமான நம்பிக்கைகளைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. குழந்தைக்கு சரியான உணவு கொடுப்பதற்கு பதிலாக சூரிய ஒளியில் வைப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அவனுக்கு மனிதர்களால் இயலாத சக்திகளை வழங்க முடியும் என்று நம்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான மூட நம்பிக்கை கொடிய விளைவாக அமைந்தது. சரியான உணவு கொடுக்கப்படாத குழந்தை நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு சோச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தது. Lyutyi முன்னதாக தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு…
The post சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த நபர்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த நபர்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
