நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ?
12 view
நெடுந்தீவு மண்ணின் வரலாற்றில் மதுபான விற்பனை நிலையம் காணப்பட்டதில்லை . அங்கு பரவலாக பனங்கள்ளு விற்பனையே காணப்படுகின்றது . பனங்கள்ளு பாவனை காரணமாக அங்கு பெரிதாக வன்முறையேதும் இது வரைகாலமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை . ஆனாலும் அவ்வரலாற்று மான்மியத்தை சீர்குலைப்பதற்காகவும் குடும்பங்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்காகவும் முதன்முறையாக மதுபான விற்பனைக்கான அனுமதி நெடுந்தீவில் வழங்கப்பட்டிருப்பதாக தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் கண்டனம் தெரிவித்துள்ளார் . ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் ஆதரவிலேயே இவ் மதுபான விற்பனை அனுமதி நெடுந்தீவிலுள்ள தனியார் விடுதியொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது . இதுவரைகாலமும் புங்குடுதீவிலுள்ள மதுபான விற்பனை நிலையத்திலிருந்து அண்ணளவான சில மதுபான போத்தல்களையே மது பாவனையாளர்கள் கொள்வனவு செய்து நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லும் வழமை காணப்பட்டிருந்தது . ஆனால் தற்போது தனியார் விடுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மதுபான விற்பனை அனுமதியூடாக நெடுந்தீவில் மதுபாவனை எண்ணற்று அதிகரிக்கவுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்…
The post நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுந்தீவை அழிக்க மதுபான விற்பனை நிலையமா ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
