தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்…! விக்னேஸ்வரன் எம்.பி மாத்திரம் பங்கேற்பு…! எட்டிப்பாக்காத முக்கிய தலைவர்கள்…!
10 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் யாழில் நேற்றையதினம்(12) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வரிசையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே கலந்துகொண்டதுடன், வேறு எந்தவொரு அரசியல்வாதியும் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், “பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட நேற்று நாங்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். அதிலே சிவில் சமூகத்தினர் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்…
The post தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்…! விக்னேஸ்வரன் எம்.பி மாத்திரம் பங்கேற்பு…! எட்டிப்பாக்காத முக்கிய தலைவர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்…! விக்னேஸ்வரன் எம்.பி மாத்திரம் பங்கேற்பு…! எட்டிப்பாக்காத முக்கிய தலைவர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
