கச்சத் தீவை வைத்து அரசியல் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்! ஆலம் எச்சரிக்கை
12 view
”கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என் எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய அரசிலும், தமிழக அரசிலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சத் தீவு விடையம் தோன்றியுள்ளது. இவ்விடயத்தினை அவர்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தினாலும், அவர்களது செயலானது அங்குள்ள மீனவர்களை உற்சாகமூட்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ளத் தூண்டும் விதமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. கச்சை தீவு விடையத்தை பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சத் தீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கு…
The post கச்சத் தீவை வைத்து அரசியல் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்! ஆலம் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சத் தீவை வைத்து அரசியல் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்! ஆலம் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
