கச்சத்தீவினை இந்தியாவின் அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்…! அன்னராசா கோரிக்கை…!
11 view
கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து மீனவர் பிரச்சினையை அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(04) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களிலே இலங்கை,இந்திய மீனவர்களினுடைய பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டிருந்தும் கூட, தமிழ் நாட்டிலே மக்களவை தேர்தல் வந்த பொழுது கச்சத்தீவு தொடர்பான பிரச்சினை தமிழ்நாட்டை அல்லது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சத்தீவு தொடர்பான பிரச்சினையை முன்னெடுத்து தங்களினுடைய பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள். வடக்கு கடல் தொழிலாளர்களாகிய எங்களை பொறுத்த அளவிலே கச்சத்தீவு என்பது இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது. எங்களுக்கு சொந்தமானது. ஆனால் எங்களுடைய பிரச்சினை இரட்டை இழுவைமடி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதுதான் எங்களினுடைய எதிர்பார்ப்பு. இந்தியாவிலே அல்லது தமிழ் நாட்டில் அந்த மீனவ சமுதாயத்தை…
The post கச்சத்தீவினை இந்தியாவின் அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்…! அன்னராசா கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சத்தீவினை இந்தியாவின் அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்…! அன்னராசா கோரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
