துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..! – அதிர்ச்சியில் உறவினர்கள்
10 view
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் துபாயில் பணியாற்றிய நிலையில் ஒரே நாளில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன் மதுசங்க என்ற இளைஞரும், ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர்கள் குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து துபாய்க்கு வேலைக்குச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் தினமும் இவர்கள் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளதுடன், தாம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தாம் சுகவீனமுற்றுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்ததாக பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கை அரசாங்கம் தலையிட்டு இறந்தவர்களின் உடல்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து, முறையான நியாயமான விசாரணை…
The post துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..! – அதிர்ச்சியில் உறவினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..! – அதிர்ச்சியில் உறவினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
