வினைத்திறனற்ற செயற்பாடு…!சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமனம்…! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…!
54 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்து வருகின்றமையால் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்கு நோக்கி கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சமுர்த்தி வேலைத் திட்டங்களை சமூக வலுவூட்டலை நோக்கி முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இன்று(04) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களால் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அமைச்சரால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சமூர்த்தி அதிகளவான உத்தியோகத்தர்கள் தற்போதுள்ள அபிவிருத்திச் சங்கத்தினால் எவ்வித நன்மைகளொ அன்றி செயற்பாடகளோ நடைபெறுவதில்லை என்றும் வெறுமனே பழிவாங்கல்களும் இடமாற்றங்களுமே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகத்தை மீள தெரிவுசெய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந் நிலையிலேயே தற்காலிக விசேட குழு ஒன்றை அமைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.. இதன்போது…
The post வினைத்திறனற்ற செயற்பாடு…!சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமனம்…! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வினைத்திறனற்ற செயற்பாடு…!சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமனம்…! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
