தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம்…! பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…!
6 view
யாழ் தெல்லிப்பழை பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மை போட்டியின் இல்ல அலங்காரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளைய தினம்(05) பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம்…! பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம்…! பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
