பாடசாலை நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பின் தலையீடு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை!
9 view
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும். இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது. இதற்கு கல்வி திணைக்களங்களும்…
The post பாடசாலை நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பின் தலையீடு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பின் தலையீடு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
