சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நிறுவப்படவுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
13 view
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 6 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது.
The post சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நிறுவப்படவுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நிறுவப்படவுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
