சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு!
8 view
“மக்கள் ஆணையற்ற அரச தலைவரே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிதத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று எம்.ஏ.சுமந்திரனால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அவர் மேலும் தெரிவிக்கையில்,, தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார். அரச தலைவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடாத்த வேண்டிய தேர்தல்களை கூட நடாத்தாமல் இருக்கிற இந்த அரச தலைவர் இனியும் தாதமிக்காது அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டுமென்றார். அரச தலைவர் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார். மேலும்…
The post சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் – சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
