அரச நிறுவனங்களால் ஒதுக்கப்படும் உள்ளூர் கலைஞர்கள் …! ஆளுநரிடம் உதவி கோரும் படக்குழு …!தொடரும் இழுத்தடிப்புக்கள்…!
8 view
யாழிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளால் உள்ளூர் கலைஞர்கள் உருவாக்கியுள்ள திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் படக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில், வழமையாக யாழ் மாநகர சபையால் உள்ளூர் கலைஞர்களை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை செய்யப்பட்டு வருகின்றது. அதாவது விநியோகஸ்தர்கள் இன்றி குறித்த கலைஞர்கள் தாமாகவே திரையரங்குகளில் குறித்த படத்தை திரையிடுவதற்கு வரிவிலக்கு செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் யாழில் வெளிவந்த உள்ளூர் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றுக்கு வரிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் எமது OTP திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுமாறு யாழ் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை மாநகர சபையால் எமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். பணபலமோ அரசியல்பலமோ இன்றி எமது யூடியூப் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்தே குறித்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். குறித்த திரைப்படம் முழுவதும் யாழ்ப்பாண கலைஞர்களை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் வரிவிலக்கு அளிக்குமாறு நாம் விடுத்த கோரிக்கைகள் தட்டிக்கழிக்கபட்டு…
The post அரச நிறுவனங்களால் ஒதுக்கப்படும் உள்ளூர் கலைஞர்கள் …! ஆளுநரிடம் உதவி கோரும் படக்குழு …!தொடரும் இழுத்தடிப்புக்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிறுவனங்களால் ஒதுக்கப்படும் உள்ளூர் கலைஞர்கள் …! ஆளுநரிடம் உதவி கோரும் படக்குழு …!தொடரும் இழுத்தடிப்புக்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.