தொல்பொருள் திணைக்கள இடங்களில் சிவலிங்கம் வைக்க வேண்டாம் – திருமலையில் பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்..!!
12 view
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரஙகளை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம். அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை…
The post தொல்பொருள் திணைக்கள இடங்களில் சிவலிங்கம் வைக்க வேண்டாம் – திருமலையில் பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொல்பொருள் திணைக்கள இடங்களில் சிவலிங்கம் வைக்க வேண்டாம் – திருமலையில் பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
