அழகு நிலையங்களுக்குள் புகுந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
23 view
இலங்கை தோல் வைத்திய நிபுணர்களின் சங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கொழும்பில் உள்ள பல முன்னணி அழகு சாதன பொருட்களின் விற்பனை நிலையங்களில் நேற்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, பதிவு செய்யப்படாத தோல் சிகிச்சை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு விற்பனை செய்தவர்கள் கொழும்பு புறக்கோட்டையில் அழகு சாதன பொருட்களின் மொத்த விற்பனை நிலையங்களில் பதிவு செய்யப்படாத தோல் சிகிச்சை மருந்துகளை கொள்வனவு செய்ததாக தெரிவித்ததாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கதிரேசன் வீதியில் உள்ள இரண்டு அழகுசாதனப் பொருட்களின் மொத்த விற்பனை நிலையங்களை சோதனை செய்ததில் 470 க்கும் மேற்பட்ட தோல் சிகிச்சை மருந்துகளைக் கண்டுபிடித்தனர். குறித்த மருந்துகள் வைத்தியர்களின் பரிந்துரையில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். இது ஒரு எளிமையான அழகுசாதனப் பொருள் அல்ல.…
The post அழகு நிலையங்களுக்குள் புகுந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அழகு நிலையங்களுக்குள் புகுந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
