மூதூரில் போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள்…! வெளியான காரணம்…!
12 view
மூதூரில் பாடசாலை மாணவர்களால் இன்று(27) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் பெண் ஆசிரியை ஒருவரை வேறு பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோர்களும் குறித்த ஆசிரியை இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post மூதூரில் போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள்…! வெளியான காரணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூரில் போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவர்கள்…! வெளியான காரணம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
