தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி…!சந்திரசேகர் குற்றச்சாட்டு…!
5 view
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது. இதனால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி எடுத்து வருகின்றார்கள். கடந்த 76 வருட ஆட்சியாளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகின்றோம், அவர்களுடைய சகாப்தம் முடிவுக்கு வர போகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் புதிய அரசாங்கம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி…!சந்திரசேகர் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி…!சந்திரசேகர் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
