கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் 103 பானைகளில் விவசாயிகளின் பொங்கல்!
22 view
இரணைமடு குளத்தின் 103 ஆவது ஆண்டுப்பொங்கல் நிகழ்வு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் 103 பானைகளில் விவசாயிகள் பொங்கல் பொங்கினர். குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் விவசாய துறைசார்ந்த திணைக்களங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடம்மாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
The post கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் 103 பானைகளில் விவசாயிகளின் பொங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் 103 பானைகளில் விவசாயிகளின் பொங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
