நுவரெலியாவில் 2சபைகளில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி!
20 view
ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் (16.01.2023) செலுத்தியது. நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளுக்கும் ஜக்கிய மக்கள் சக்தி போட்டியிடவுள்ள நிலையில் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே தெரிவித்தார்.
The post நுவரெலியாவில் 2சபைகளில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியாவில் 2சபைகளில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
