யாழில் ரணிலுக்கு எதிரான போராட்டம் வெறும் ட்ரெயிலரே : விரைவில் மெயின் பிக்ஸர் வெளியாகும்- சாணக்கியன் எம்.பி எச்சரிக்கை!
20 view
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது என்றால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் அதனை பகிரங்கமாக வெளியிடட்டும் சம்பந்தர் ஐயாவினை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையென்று என்றும் அவர் தெரிவித்தார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்திற்கும் முன்பு தமிழ் மக்களுடைய நிரந்தமான அரசியல் தீர்வை பற்றி ஒரு முடிவு காணலாம் என கூறுகின்றார் ஆனால் அது தொடர்பான முன்னேற்றமான செயற்பாடுகளை நாங்கள் அவதானிக்க கூடியதாக இல்லை. யாழ்ப்பாணத்திலேயே ஜனாதிபதி சந்தித்த எதிர்ப்பு வெறும் டிரைலர் மாத்திரமே அதாவது படத்தின் ஆரம்ப விடயங்கள். மிகுதி விடயங்களை எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு பிற்பாடு…
The post யாழில் ரணிலுக்கு எதிரான போராட்டம் வெறும் ட்ரெயிலரே : விரைவில் மெயின் பிக்ஸர் வெளியாகும்- சாணக்கியன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ரணிலுக்கு எதிரான போராட்டம் வெறும் ட்ரெயிலரே : விரைவில் மெயின் பிக்ஸர் வெளியாகும்- சாணக்கியன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
