இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேச்சுவார்த்தை!
22 view
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது. இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேச்சுவார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேச்சுவார்த்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
