சீன அதிகாரிகள் வருகைக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் அதிருப்தி!
14 view
தமது வாழ்விடப் பகுதிகளுக்கு அண்மைக்காலமாக சீன அதிகாரிகள் வந்து செல்வது தொடர்பில் வடக்கு கிழக்கின் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் கரிசனை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஊடகம் ஒன்றை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வே தலைமையிலான குழு ஜனவரியில் யாழ்ப்பாணம் சென்றிருந்தது. அங்கு அவர்கள் நிவாரணம் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர். ஏற்கனவே சீன மக்கள் படையினரின் பிரசன்னம், இலங்கையின் வடக்கில் உள்ளதாகவும் இது தமது பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தமிழ் நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது. சீன மக்கள் பாதுகாப்புப்படையினர் இலங்கையின் வடக்கில் இருந்து அதி நவீன கருவிகளின் ஊடாக தமிழகத்தின் கரையோரப்பகுதிகளை அவதானித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீன நாட்டினர் வடக்கில் கடல் வெள்ளரி உற்பத்தி என்ற அடிப்படையில் முல்லைத்தீவு, பருத்தித்துறை, அனலைத்தீவு, மீசாலை மற்றும் சாவகச்சேரி போன்ற இடங்களில் நடமாடுகின்றனர். இது…
The post சீன அதிகாரிகள் வருகைக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன அதிகாரிகள் வருகைக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
