தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்! கோமகன் ஆதங்கம்
10 view
தமிழ் அரசியல் கைதிகள் பொங்கலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற ஏக்கத்துடன் அவர்களின் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் விடுதலை செய்யப்படாது நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். எமது நிலங்கள் இராணுவத்தின் கையகப்படுத்தலுக்குள் காணப்படுவதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அகதிமுகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர் என குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த குரலற்றோரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், நாட்டின் ஜனாதிபதி இன்று எங்களுடைய மண்ணில் தேசிய பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். எங்களுடைய…
The post தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்! கோமகன் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்றனர்! கோமகன் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
