ஹெலிகப்டரிலிருந்து தரையிறங்கி கையை கையில் எடுத்தது சுதந்திரக் கட்சி!
10 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக ‘கை’ சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் கீழ் ‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மஹரகம தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் புத்தளம், அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஹெலிகொப்டர் சின்னத்தின் கீழ் கூட்டணியாக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவானது அத கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இன்று (ஜன.16) செலுத்தப்பட்டது. காலி மாவட்டத்திற்கான கட்டுப் பண வைப்பு நாளை (ஜன.17) செலுத்தப்படும் ஏஐஎன குணசிங்க குறிப்பிட்டார்.…
The post ஹெலிகப்டரிலிருந்து தரையிறங்கி கையை கையில் எடுத்தது சுதந்திரக் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹெலிகப்டரிலிருந்து தரையிறங்கி கையை கையில் எடுத்தது சுதந்திரக் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
