வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு – 4,000 கையொப்பங்கள் அடங்கிய மனு ஜனாதிபதியிடம்!
21 view
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4,000 பேரின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது. இவர்கள் அமைதியான நடைபயணமாக சென்று இந்த மனுவை கையளித்ததாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணை செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்தார். இதேவேளை, உமா ஓயா நீர் மின் நிலையமானது எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த மின் உற்பத்தி நிலையம் 120 மெகாவாட் திறனை தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
The post வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு – 4,000 கையொப்பங்கள் அடங்கிய மனு ஜனாதிபதியிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு – 4,000 கையொப்பங்கள் அடங்கிய மனு ஜனாதிபதியிடம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
