இலங்கையில் மதுபானம் வாங்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
10 view
நாட்டில் மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மதுபானசாலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மதுவரித் திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மதுபான வர்க்கத்தின் தரம் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஸ்டிக்கர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவ்வாறான ஸ்டிக்கர்கள் போலியான வகையில் ஒட்டப்படுகின்றமை சட்டத்துக்கு முறனானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கையில் மதுபானம் வாங்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மதுபானம் வாங்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
