உள்ளுராட்சி தேர்தல் அவசியமில்லை – மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் மாற்றமே – ஜனகன்!
14 view
அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் மக்களுக்கானதா அல்லது அரசியல்வாதிகளுக்கான தேர்தலா என தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி.விநாயகமூர்த்தி ஜனகன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில், உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணமில்லாதபோது உள்ளுராட்சி சபைத்தேர்தலை நடத்துவதை கேலிக்கூத்தாகவே தாம் பார்ப்பதாக ஜனகன் குறிப்பிட்டிருந்தார். இன்றைய கால கட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி ஜக்கிய மக்கள் சக்தியாக உருமாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்களை பொறுத்தவரையில் அரசியலில் ஒரு மாற்றத்தையே எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
The post உள்ளுராட்சி தேர்தல் அவசியமில்லை – மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் மாற்றமே – ஜனகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளுராட்சி தேர்தல் அவசியமில்லை – மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் மாற்றமே – ஜனகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
