முகாம்களில் வாழ்வதற்கு நாங்கள் என்ன அகதிகளா? கேள்வி எழுப்பும் மயிலிட்டி மக்கள்

8 view
இந்த மண்ணில் பிறந்த தங்களுக்கு தமது சொந்த இடங்களை தருவதற்கு அரசாங்கம் ஏன் பின் நிற்பதாக மயிலிட்டி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தொடக்கம் தொடர் போராட்டம் ஒன்றை மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துள்ளனர். இதன்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக குறித்த முகம்களுக்கு பொறுப்பான தலைவர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். கடந்த 32 வருடங்களாக தாம் முகாம்களில் வாழ்வதாகவும் முகாம்களில் பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் எனிமேல் இந்த துன்பங்களை அனுபவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அரசாங்கம் தமது சொந்த காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென மயிலிட்டி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் இருப்பதற்கு தாங்கள் அகதிகளா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
The post முகாம்களில் வாழ்வதற்கு நாங்கள் என்ன அகதிகளா? கேள்வி எழுப்பும் மயிலிட்டி மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース