கட்டுப்பணத்தை செலுத்தி விட்டு வந்து தேர்தலுக்கு நிதியில்லை என தெரிவித்த பந்துல!
13 view
அமைச்சர் பந்துல குணவர்தன ஹோஹாகம பிரதேசத்திற்கு கட்டுப்பணம் செலுத்திய பின்னர் அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தலை நடத்த நிதியில்லை என கருத்து தெரிவித்திருந்ததாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்கம் ஆரம்பம் முதலே தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறுதி முயற்சியாக சில தினங்களிற்கு முன்னர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அமைச்சரவை அரசியலமைப்பிற்கு ஏதிரான அமைச்சரவையாக மாறியுள்ளது. எமக்கு ஒரு பிரைச்சினை உள்ளது. உண்மையிலேயே இந்த தீர்மானம் அமைச்சரவையில் எட்டப்பட்டதா? நான் சவால் விடுகின்றேன். இந்த தீர்மானம் அமைச்சரவையில் எட்டப்படவில்லை. கடிதத்தில் பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தேவைக்கு அமைவாகவே அந்த கடிதம் அனுப்பப்பட்டது. நான் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கு சவால் விடுகின்றேன். நீங்கள் எடுத்த தீர்மானம் கூட்டத்தின் பதிவேட்டில் இருக்கும் அல்லவா? முடிந்தால் அவற்றை வெளியிடுங்கள்.…
The post கட்டுப்பணத்தை செலுத்தி விட்டு வந்து தேர்தலுக்கு நிதியில்லை என தெரிவித்த பந்துல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுப்பணத்தை செலுத்தி விட்டு வந்து தேர்தலுக்கு நிதியில்லை என தெரிவித்த பந்துல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
