யாழில் விரலை வெட்டி மோதிரத்தை ஆட்டைய போட்ட கில்லாடிகள்!
7 view
யாழில் மோதிரத்தை எடுப்பதற்காக விரலை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் தம்பசிட்டியிலுள்ள அவரது சகோதரரின் இல்லத்தில் தங்கியிருந்த போது வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் மூவர், அவரின் கையிலிருந்து மோதிரத்தை கொள்ளையிட்டுள்ளனர். மற்றைய மோதிரத்தை கழற்ற முடியாத நிலையில் கைவிரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
The post யாழில் விரலை வெட்டி மோதிரத்தை ஆட்டைய போட்ட கில்லாடிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் விரலை வெட்டி மோதிரத்தை ஆட்டைய போட்ட கில்லாடிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
