ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்- சபா. குகதாஸ் திட்டவட்டம்!
16 view
தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கூட்டமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தாலும் தன்நிகர் அற்ற தலைவனின் வழி காட்டலினாலும் உருவாக்கப்பட்டது. இத்தகைய தியாகத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்ற சிலர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒற்றுமையை சீர்குலைப்பதை தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். சிங்கள் ஆட்சியாளர்கள் ஒற்றுமையாக வாருங்கள் என தமிழர் தரப்பை பார்த்து கோலி செய்யும் போது தொடர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் வகையிலும் தமிழர் தரப்பே இருப்பது…
The post ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்- சபா. குகதாஸ் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்- சபா. குகதாஸ் திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
