யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்!
8 view
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணிக்கு, யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் கூட்டம் சாவகச்சேரி நலன்புரி மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையிலும் செயலாளர் தலைமையிலும் இடம்பெற்றது. இதிலே மதகுருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். நகரசபையின் தவிசாளர், உப தவிசாளர் கலந்துகொண்டுள்ளனர். அதே நேரத்தில் சசிகலா அவர்களும், தென்மராட்சியின் முன்னைய நாள் அதிபர் அருந்தவபாலன், மற்றும் போராளிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், போராளிகளால் வறுமைக்குட்பட்ட போராளிகளுக்கு தைப்பொங்கல் செலவிற்காக முப்பதாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகரசபை தவிசாளர் சிறப்புரை இடம்பெற்றதுடன் .வவுனியா மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் , கிளிநெளிச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அலன், மற்றும் மதகுருமார்களின் ஆசியுரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்த்தக்கது.
The post யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், மாவட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
