தேர்தலின் பின்னர் ஒற்றுமையாக ஒன்றுபடுவோம் – இது புதிய அணுமுறை என்கிறார் மாவை!
7 view
தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட்டால் மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற காரணத்தினாலேயே தனித்து போட்டியிடுவதற்கான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிரசுகட்சியின் சிபாரிசானது ஒரு புதிய நடைமுறை என்றும் வெற்றியை பெறுவதற்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான ஒரு அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுடன் தமது தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார். தேர்தலின் பின்னர் கிடைக்கபெற்ற வாக்குளின் அடிப்படையில் ஒன்றாக ஒற்றுமையாக செயற்படுவோம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுமுறையின் நோக்கம் வெற்றியை உறுதி செய்வதற்காகவே என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்திருந்தார்.
The post தேர்தலின் பின்னர் ஒற்றுமையாக ஒன்றுபடுவோம் – இது புதிய அணுமுறை என்கிறார் மாவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலின் பின்னர் ஒற்றுமையாக ஒன்றுபடுவோம் – இது புதிய அணுமுறை என்கிறார் மாவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
