மீண்டும் சிக்கலில் மாட்டவுள்ள மைத்திரி – சட்டமா அதிபரிடம் அநுர வேண்டுகோள்.!
7 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களை மணலில் மூழ்க விடாது, சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறிய தரப்பினருக்கு எதிராக சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த அடிப்படை உரிமை மனுவில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள போதிலும், தாக்குதலைத் தடுக்க தவறியமைக்காக புதிய வழக்கை தாக்கல் செய்வது அவசியமானது என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளை குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது மிகவும் தீர்க்கமானது. இந்த தாக்குதலுக்கு இரண்டு முக்கிய கட்சிகள் பொறுப்பு.…
The post மீண்டும் சிக்கலில் மாட்டவுள்ள மைத்திரி – சட்டமா அதிபரிடம் அநுர வேண்டுகோள்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் சிக்கலில் மாட்டவுள்ள மைத்திரி – சட்டமா அதிபரிடம் அநுர வேண்டுகோள்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
