தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால் என்ன என்று தெரியாத கத்துக்குட்டிகள் அரசியல் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி கருத்து!
9 view
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பேருந்து முழுப்பலத்துடன் அதன் இலங்கை நோக்கிய பயணித்து கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.தற்போது அரசியல் செய்கின்ற சில கத்துக்குட்டி அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்றால், என்ன என்பது கூட தெரியாதென கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு பங்களிப்பும் செய்யாதவர்கள் இன்று தமிழ் மக்கள் முன் வந்து உரிமைகளை பெற்று தரப்போவதாக கூறுவது வேடிக்கையான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால் என்ன என்று தெரியாத கத்துக்குட்டிகள் அரசியல் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால் என்ன என்று தெரியாத கத்துக்குட்டிகள் அரசியல் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
