"உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு." – தினேஷ் குணவர்தன!
18 view
உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் சூழல் நேய புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (2023.01.12) நடைபெற்ற வேர்ல்ட் விஷன் கழிவு முகாமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான சூழலுக்கும், மக்களுக்கும் உகந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேவையான கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய முறைகளின்படி செயற்பட வழிசெய்யப்படும். அதற்கு அரசு சார்பிலும், உள்ளூராட்சி துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் உறுதியளிக்கிறேன். ஆனால், இப்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் இதைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல எதிர்காலத்திற்காக…
The post "உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு." – தினேஷ் குணவர்தன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு." – தினேஷ் குணவர்தன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
