முல்லையில் அரச உத்தியோகத்தர்களை குரங்குக்கு காவலுக்கு அமர்த்திய பிரதேச செயலாளர்!
19 view
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலகத்தின் கீழுள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய தம்மை பிரதேச செயலாளர் குரங்கு காவலுக்கு அமர்த்துவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இயற்கையான முறையில் செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய அறுவடை விழா கடந்த வருடம் புரட்டாதி மாதம் (17) இடம்பெற்றிருந்தது , அதற்கான அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் தொடர்பில் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட மாவட்ட செயலாளர் மாந்தை கிழக்கின் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை வாழ்த்தியிருந்தார் ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் பிரதேச செயலக வளாகத்துக்குள் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பகுதிக்கு வருகை தந்து 2 மணித்தியாலங்கள் ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் குரங்கு காவல் இருக்கவேண்டும் என பிரதேச செயலாளர் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள உத்தியோகத்தர்கள்…
The post முல்லையில் அரச உத்தியோகத்தர்களை குரங்குக்கு காவலுக்கு அமர்த்திய பிரதேச செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் அரச உத்தியோகத்தர்களை குரங்குக்கு காவலுக்கு அமர்த்திய பிரதேச செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
