அபாய நிலைமையிலிருந்து நாட்டை மீட்க புதிய அரசியல் முறை அவசியம்! – விமல்
6 view
வங்குரோத்து அடைந்துள்ள நாட்டைம மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அவசியம் என உத்தர லங்கா சபாகயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு புதிய அரசியல் முறைமையொன்று அத்தியாவசியமானதாகும். அந்த பொறுப்பினையே நாம் தற்போது ஏற்றுள்ளோம். இலங்கையின் நிதி நெருக்கடியின் பாரதூர தன்மை குறித்து பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபாயமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்ப்பதற்கு எந்தவொரு முடிவினையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். என்று குறிப்பிட்டிருந்தார்.
The post அபாய நிலைமையிலிருந்து நாட்டை மீட்க புதிய அரசியல் முறை அவசியம்! – விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபாய நிலைமையிலிருந்து நாட்டை மீட்க புதிய அரசியல் முறை அவசியம்! – விமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
