புனர்வாழ்வு தொடர்பான புதிய சட்டமூலம் – சிறுபான்மை மக்களுக்கே பாதிப்பு!
12 view
அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலம் உயிர்நீதிமன்றதினால் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்ட போதும் இதனை நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்கு எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சட்டத்தரணி சுவஸ்திக்கா அருள்லிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அரசுக்கு எதிரானவர்களை பழிவாங்குவதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்த நாட்டில் புதிய புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது முதலில் பாதிக்கப்படுவது சிறுபான்மை மக்கள் என்றும் சுவஸ்திக்கா அருள்லிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post புனர்வாழ்வு தொடர்பான புதிய சட்டமூலம் – சிறுபான்மை மக்களுக்கே பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனர்வாழ்வு தொடர்பான புதிய சட்டமூலம் – சிறுபான்மை மக்களுக்கே பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
