எமது ஆட்சியை இனி ஒட்டுக்குழுக்கள் தீர்மானிக்க முடியாது – சாணக்கியன்
7 view
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து, தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்த வகையில் அதிகூடிய ஆசனங்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கோ, ஒட்டுக் குழுக்களுக்கோ போகாத வண்ணம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்திருக்கிறோம். உண்மையில் இந்த முடிவினூடாக எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுமே நாங்கள் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவில்லாமல் சபைகளின் ஆட்சியை அமைக்கக் கூடிய நிலை உருவாகும். கடந்த காலங்களில் நாங்கள் சில பிரதேச சபைகளைப் பார்த்தால் 18, 20 வாக்குகளைப் பெற்றவர்கள் சுயேட்சைக் குழுக்களில் இறங்கி பிரதேச சபைத் தவிசாளர் பதவியைப் பெறக் கூடிய நிலை உருவாகியிருந்தது. சில…
The post எமது ஆட்சியை இனி ஒட்டுக்குழுக்கள் தீர்மானிக்க முடியாது – சாணக்கியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது ஆட்சியை இனி ஒட்டுக்குழுக்கள் தீர்மானிக்க முடியாது – சாணக்கியன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
