கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடை
6 view
இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, அதே போல் இராணுவ அதிகாரி சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்காக கனடா தடைகளை விதித்துள்ளது. இதனை வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) நேற்று அறிவித்தார். கனடாவின் சிறப்பு பொருளாதார நடவடிக்கை விதிமுறைகளின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நபர்கள் கனடாவிற்குள் நுழைய மறுக்கப்படுகிறார்கள். கனடாவின் குடிமக்கள் தடைசெய்யப்பட்ட நபர்களுடன் கனடாவிற்குள் அல்லது அதற்கு வெளியே எந்தவொரு நிதி, பொருளாதாரம் அல்லது சொத்து தொடர்பான உறவுகளைப் பேணுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் விதித்த தடைக்கு வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது. கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர்…
The post கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாபய, மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனடா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிரடித் தடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
