முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சி!
12 view
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர் பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறினார். தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக…
The post முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
