தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் தலையீடு! – முறைப்பாடு மகஜர் கையளிப்பு
15 view
தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் முறைப்பாடும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவரான சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்று மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு வருகை தந்த பின்னர் எமது செய்தி பிரிவிற்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். சந்திரகுமார் சுதன் என்பவர் சங்கத்தின் கணக்காய்வுகள் பிழை என ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து குற்றம் சுமத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டு என்பது கடற்தொழில் அங்கத்தவர்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதாக சிவநேசபிள்ளை சிவச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுமார் சுதன் என்பவர் அரசியல் சார்ந்து தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நாங்கள் பணத்தை கொடுத்துளோம். எங்களுடைய முதலீடு கடற்றொழில் சங்கத்திடமே உள்ளது. சங்கத்தினுடைய வருமதியாளர் பட்டியலில் இருக்கின்றவர்களிடம் எங்களுடைய ஒவ்வொரு ரூபாயும் உள்ளது. இவர் முதலில் தன்னுடைய பணத்தை கட்டிய பின்னர்…
The post தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் தலையீடு! – முறைப்பாடு மகஜர் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பாட்டி கிராமிய கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசியல் தலையீடு! – முறைப்பாடு மகஜர் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
