இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்!
73 view
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று(புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி என்பன இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன. கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த புதிய கூட்டணி நடைபெறவுள்ள தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
The post இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
