வெளிநாடொன்றில் இலங்கை இளநீருக்கு வந்த மவுசு! குவியும் டொலர்
10 view
டுபாய் சந்தையில் இலங்கையின் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கே உரித்தான இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் கடந்த காலங்களில் இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் உண்டியல் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையினால் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இளநீர் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை முறைமை ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இளநீர் தற்போது 0.8 டொலர்களுக்கு ( 296 ரூபாய்) அந்நாட்டு துறைமுகத்தில் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் இளநீர் டுபாய் சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று அந்நாட்டின் கரையோரப்…
The post வெளிநாடொன்றில் இலங்கை இளநீருக்கு வந்த மவுசு! குவியும் டொலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாடொன்றில் இலங்கை இளநீருக்கு வந்த மவுசு! குவியும் டொலர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
