இலங்கை கடற்பரப்பில், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
6 view
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் நாட்டின் கடல் சூழல் பாதிப்பு இழப்பீடு குறித்து விசாரிக்க நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி, சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர அதன் அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர்களுக்கு இன்று (10) கையளித்தார். எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். இந்த நிபுணர் குழுவில் 40 பிரதிநிதிகள் உள்ளனர். அங்கு இணைத் தலைவர்களாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பின் படிப்புத் துறையின் பீடாதிபதி பேராசிரியர் அஜித் டி சில்வா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன உள்ளிட்ட பலர் உள்ளனர். கப்பல் விபத்து தொடர்பாக ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழு பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்கள். அங்கு பேசிய…
The post இலங்கை கடற்பரப்பில், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை கடற்பரப்பில், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
