பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் – அனுமதி வழங்கிய பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

7 view
யாழ் மாவட்ட  பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் கடமையை மேலதிக அரசாங்க அதிபராக இருந்த பிரதீபனிடம் வழங்கிச் சென்றார். இந்நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில்  மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுவரை எவரும் நியமிக்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலமை காணப்படுகிறது. இந்நிலையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய பிரதீபனை பதில் அரசாங்க அதிபராக நீடித்து பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் – அனுமதி வழங்கிய பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース