அல்-கொய்தா அமைப்புக்கு நிதியளித்த இலங்கை இரத்தினக்கல் நிறுவனம்
6 view
அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம், தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும் வணிகத்தைத் தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆராச்சி மற்றும் தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தாலிப்புடன் அவருக்குச் சொந்தமான ஒரு இரத்தினக் கல் வணிகம், 2020 அக்டோபரில் அமெரிக்க திறைசேரியால் தடைசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் 2021 இல் அவுஸ்திரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தக நிறுவனம், அல்-கொய்தாவுக்கு நிதியளிக்கும் தாலிப்புக்கு வருவாயை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குதாரராக இருந்தது என்று கரோன் என்ற ஆராச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்த வர்த்தக நிறுவனம் இலங்கையின் தென்மேற்கு கரையோர பிரதேசத்தில் வசிக்கும், முகமது ஹாரிஸ் நிஸார் என்பவரின் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
The post அல்-கொய்தா அமைப்புக்கு நிதியளித்த இலங்கை இரத்தினக்கல் நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அல்-கொய்தா அமைப்புக்கு நிதியளித்த இலங்கை இரத்தினக்கல் நிறுவனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
