ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு!
12 view
புகையிரத அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள்சேர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என புகையிரத பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்தார். சேவையின் தேவையின் அடிப்படையில் அவர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்கப்பெறும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 31 ஆம் திகதி புகையிரத சேவையில் இருந்து சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்து, அத்தியவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணியமர்த்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
The post ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
